முரண்பாடு ஏன்?
வாசிக்கும் கல்வியதை ஆசான் கற்பிப்பார்
வழித்தோன்றல் அவரின் ஏன் சிலர் மூடர்?
தேசியவாதி என்பார் தேசம் நேசிப்பவர்
தேசத் துரோகியும் பிள்ளையாய் இருப்பார்
பேசிப் பேசியே சிலர் பெருஞ் செல்வந்தராம்
பிள்ளை, பேரன் பேச்சு எவரோ எழுதுவாராம்
காசினிக் கீரையோ காலங்காலமாய் துவர்க்குது
காசு பின்னால் ஓடும் மனிதனில் ஏன் முரண்பாடு?
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment