Thursday, February 27, 2025

சுஜாதா எனும் ஜாம்பவான்

யாரும் எழுத முடியாது என

ஒதுங்கி நின்ற எல்லையை

எளிதாய்த் தொட்டவன்!


அறிவியல் புத்தகங்கள் தமிழிலா

என புருவம் உயர்த்தியோரை

எல்லாம் அலற விட்டவன்!


கம்ப்யூட்டரின் கதையை

எளிய நடையிலே

அழகு தமிழிலே 

படைத்தளித்தவன்!


சிலிக்கன் சில்லுப் புரட்சியை

சிறப்பான தமிழில்

இலகுவாக எழுதி

புரட்சி செய்தவன்!


நவீன தமிழ் அறிவியல்

புதினங்களின் முன்னோடி

தமிழ் இலக்கிய உலகில்

நவீனத்தைக் காட்டிய கண்ணாடி!


ஸ்ரீரங்கத்து கதைகளையும்

ரோபோ நாயான ஜீனோவையும்

யார் மறப்பார்கள்!


இவரது கதைகளைப் படிக்க

தமிழ் வாசகர்கள் பற்பலர்

அனைத்தையும் துறப்பார்கள்!!


சுஜாதா எனும் ஜாம்பவான்

எழுதியதை நிறுத்திய தினம் இன்று

தமிழ் எழுத்துலகை விட்டு

நிரந்தர ஓய்வெடுக்க சென்ற

நாள் இன்று!


நினைவேந்துவோம்!

அவர்தம் புகழ் பரப்புவோம்!!


உங்கள்_தோழன்_ஸ்ரீவி

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...