தள்ளாடும் தாய்மொழி தினம்
வாய்த்த பேறு நம் தமிழ் மொழி கிடைத்தது
வள்ளுவன், பாரதி...என ஊட்டியும் விட்டது
தாய் மொழியாம் ஆலமரம் அழியுது இன்று
தாங்கும் அதன் விழுதுகள் வெட்டப் படுது
வாய் நிறைய அம்மா அப்பா மழலை அழைத்தது
வந்த சொற்கள் "மம்மி, டாடீ" விரைந்து துடைத்தது
ஆய்ந்தாய்ந்து முன்னோர்கள் கட்டிய கோட்டை
அலட்சிய அரசுகள் பின் போட்டன பூட்டை
வேய்ந்த பட்டாடை இது தேர்ந்த நூல் கொண்டு
வீட்டில் அலமாரியில் தூசு படிந்து கொண்டு
பாய்ந்து தேடிச்சென்று உ. வே. சா. தொகுத்தது
படிப்பாரின்றி காற்றில் பறக்க விடவா இது?
தாய்ப்பால் விற்று குழவிக்குத் தருவாரோ வேறு?
தாய்மொழி நேராய் அறிவு தருமோ வேறொன்று?
காய்ந்து முற்றாக அழிக்கப் பட விடலாமோ?
கட்டாயப் பயிற்று மொழி தமிழ் என்றாமோ?
__ குத்தனூர் சேஷுதாஸ்
---------------------
`०`०`०`०`०`०`०`०`०`०`०
தமிழா..விழி.. எழு..
தமிழைத் தொழு
०`०`०`०`०`०`०`०`०`०`०
தமிழ் மொழி நன்கு
தழைக்கட்டும்
இப்பூவுலகே தமிழால்
பிழைக்கட்டும்
புவியெங்கும்
தமிழே ஒலிக்கட்டும்
நம் தலைமுறைகள்
தமிழைப் படிக்கட்டும்.
எம்மொழி யாகினும்
வாசிக்கப் பழகு
செம்மொழியாம் நம்மொழியை
நேசித்தல் அழகு
தமிழ் இல்லத்துக்
குழந்தைகள் எல்லாம்
டாடி மம்மி என
விளித்தல் இழுக்கு.
அம்மா அப்பா என
சொல்லிடவே பழக்கு.
தித்திக்கும் தமிழே
தரணி ஆளும்..
எத்திக்கும் அதனது
கரங்கள் நீளும்..!
*உலகத் தாய் மொழி
தினமாம்* இன்று (பிப்.21)
தமிழை உயர்த்த
சூளுரைத்தல் நன்று!
உங்கள்_தோழன்_ஸ்ரீவி
No comments:
Post a Comment