சங்க இலக்கிய சுவடிகள் எல்லாம்
செல்லரித்துப் போய் இருக்கும்
தங்கத் தினும் உயர்ந்த
ஓலைகளோ
மண்ணோடு மண்ணாகிப் போய் இருக்கும்
பதிணென் மேல் கணக்கு
பயன் படாது போய் இருக்கும்
பதிணென் கீழ் கணக்கு
போகித் தீயில் எரிந்திருக்கும்
அர்ப்பணிப்பு உணர்வோடு
அங்கும் இங்கும் அலைந்தாரே
காடு மேடு கழனி எல்லாம்
சுற்றிச் சுற்றித் திரிந்தாரே
இலக்கியப் புதையல் ஓலைகளை
தேடித் தேடி அலைந்தாரே
அரிய பொக்கிஷ சுவடிகளை
மீட்டெடுத்துக் கொடுத்தாரே
கரையான் அரித்து ஒழிக்கா திருக்க
அச்சில் அவற்றை ஏற்றினாரே
செம்மொழியாய் உலா வரவே
நம் மொழிக்கு சேவை அவரும் செய்தாரே
தமிழன்னை சேவை புரிய
தமிழ்த்தாத்தா பிறந்த
தினமின்று
போற்றி நாமும் புகழ்ந்திடுவோம்
அவரைப் புகழ்ந்து மகிழ்ந்திடுவோம்!
*உங்கள் தோழன் ஸ்ரீவி*
------------------------------------
🙏🙏
தமிழ்த் தாத்தா உ. வே.
சாமிநாத ஐயரின்
171 ஆவது பிறந்த தினம் இன்று.
அன்னாருக்கு,முதற் கண் தமிழ்ப் பெயரன்களும் பெயர்த்திகளும்
கண்கள் பனிக்க
நெஞ்சு நிறைய
செலுத்தும் அஞ்சலி, இரு கரம் கூப்பி.
ஓலைச் சுவடிகளுக்கும்
காய்ந்த ஓலைகளுக்கும்
வேறுபாடு தெரியாத
தமிழ் தற்குறிகளிடமிருந்து
தமிழ் பொக்கிஷ இலக்கியங்களை
"தீயினில் தூசு" ஆகாமல் காப்பாற்றிப்
பாதுகாத்த முத்தமிழ்க்காவலர்.
சுவடுகள் இல்லாமல்
சிதறிக் கிடந்த ஓலைச்சுவடிகளை
நாடெங்கும் தம் காலடிச்சுவடிகளைப்
பதித்து , தேடி எடுத்து
அச்சிலேற்றி ,
'நச்சென்று" தமிழை நச்சினார் மனதில்
இடம்
பெற்றவர்.
தீ, கரையான், கைநாட்டுகளிடம் இருந்து அவர் காத்துக்
கொடுத்த தமிழ்ப் புதையல்களை தொழில் நுட்ப உதவியுடன் டிஜிட்டல்
தரவுகளாக , காப்பது
தமிழ் சமுதாயத்தின்
பெருங்கடமை.
- மோகன்
----------------------
குவிகிறதோ விசா !
கன்னல் சாறிடம் சிற்றெறும்புகள் அறியும்
கலாப மயில் கண்டு கார்மேகம் பொழியும்
பின்னிய கூந்தல் பிச்சிப் பூக்கள் தேடும்
பேனா முனை தேடி கற்பனைகள் ஓடும்
தன்னிகரிலாத் தமிழில் தனையே இழந்தாய் !
" த " என்றால் "எங்கே? எங்கே?" அலைந்தாய்
அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்த " உ. வே. சா ! "
அதனால் தான் தமிழ் அறிய குவிகிறதோ " விசா " !
__ குத்தனூர் சேஷுதாஸ்
-மோகன்
No comments:
Post a Comment