நடைபயிற்சி நேரமது
அழையா தோழமையாக...
கொஞ்சம் அன்பு தேடி
சேர்ந்து வரும் நாயொன்று
கடித்து விடுமென
என் வேகம் கூடும்...
புரிந்து விலகிச் செல்லும்
அன்பு கிடைக்காத நாய்
வாழ்வின் எங்கோ ஓரிடத்தில்
நாயாக நானும் இருந்திருந்தாலும் ...
கேட்பவருக்கெல்லாம்
கிடைத்து விடுவதில்லை அன்பு...'
அமுதவல்லி
No comments:
Post a Comment