உனக்குக் கால் வலிக்கும், நான் தூக்கிக்குறேன்’ என்று சொல்லும்போது வேண்டாம் என்றும்,
கை வலிக்குது கொஞ்சம் இறங்கு’ என்று சொல்லும்போது இறங்காததும் குழந்தையின் டிசைன்!
- தியாகராஜன்
------------------------------------------------------
இது மட்டுமா குழந்தை
நோகும் கால்கள் என தூக்க நினைப்போம்
நோ நோ வேண்டாமென இன்னும் ஓடும்
வேகமாய் ஓடாதே விழுவாய் என்போம்
விழுந்து முடிக்குமுன் இரத்தமும் வரும்
போகாதே அங்கே பூச்சி உண்டாம் என்போம்
புழு ஒன்று கையில் துடிதுடிக்கக் காண்போம்
தாகமாய் இருக்கும் தண்ணீர் குடி என்போம்
தட்டித் தண்ணீர் அதைக் கீழே கொட்டும்
கைபேசி வேண்டாம் கண்கள் சிவக்கும் என்போம்
கையிலிருந்ததைக் காகமாய்க் கவ்வி ஓடும்
தைதை என குதிக்காதே தாமரைக் கால் நோகும்
தரையில் இருந்த கோலம் மாயம் மாயம்
நெய், பருப்பு சாதம் சக்தி வரும் என்போம்
நெளியும் நூடுல்ஸ் தான் வேணும் அடமாம்
வெயிலில் போகாதே வியர்க்குரு வரும் என்போம்
வியர்வையில் நனைந்து விளையாடி வரும்
" இவையும் இன்னமும் தான் குழந்தை "
__ குத்தனூர் சேஷுதாஸ்
-------------------
குழந்தை சொன்னதை
கேட்கும் அல்லது கேட்காது..
பதின்ம பருவமோ
நம்மை
நோக்காது!
எது சொன்னாலும்
நோ( no)க் காது!
திட்டினாலும்
நோகாது!
- சங்கீதா
----------------------------
No comments:
Post a Comment