*°*°*°**°*°*°*°*°*°*°*°*°*°*°*
*பசுமை நினைவுகள்*
°*°*°*°*°*°*°*°*°*°*°*°*°*°*°*
சென்னை சென்ட்ரல் பக்கம்
செந்நிறக் கட்டடம் கம்பீரமாய் நிற்கும்
அல்லிக் குளம் அருகில்
புத்தகங்கள் நடைபாதையிலும் விற்கும்
மூர் மார்க்கெட் வளாகத்தில்
கிடைக்காத பொருளே இல்லை
ஊரார் இனிப்பை மொய்க்கும் ஈக்களாய்
கடைகளில் புத்தகம் வாங்கா நாளுமில்லை
அந்தோ பரிதாபம் அவ்விடமே
இரவோடு இரவாக எரிந்து போனது
சென்னை நகரின் சிறப்பு ஒன்று
மண்ணோடு மண்ணாய் சரிந்து போனது.
அக்கினித் தேவன் தானே வந்தானோ
அக்கிரம செயலில் வந்து விழுந்தானோ
அகிலம் அறிய வாய்ப்பில்லை
அவனியில் இப்போது மூர்மார்க்கெட் இல்லை
ஆனாலும்
அந்நினைவுகள்
அக்கால
சென்னைவாசிகளுக்கு
பசுமையான நினைவுகளே!
*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*
No comments:
Post a Comment