ஆதாயம் எங்கே?
வாங்கிக் கொள்ளும் நேரம் வருவாராம் பலர்
வறண்ட பின்னரும் உடன் இருப்பார் எவர்?
தேங்கும் நீர்க் குளமதில் அல்லி, நீர்க்கோழி
தெரியும் அதற்கு அவை அழையா விருந்தாளி
தாங்கும் கிளையில்தான் பறவையும் அமரும்
தவறியும் நாணலிடம் போகாதாம் ஏதும்.
வாங்க வாங்க என வரவேற்கப்படும் பணம்
வயிறு ஒட்டினால் உலகு வாசலில் நிறுத்தும்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment