என்ன உலகம்
சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை ஒழுங்கில்லாதவன் னு சொல்லும் சமூகம், காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால், லூஸு எனச் சொல்லுகிறதே!
- தியாகராஜன்
------------------------------------------------
சட்டை பட்டனை
சட்டை செய்வோரை
அசட்டை செய்தால்
கிடைக்கும் மனநிம்மதி
- அமுதவல்லி
--------------------------------------
பித்தானை சரியாகப்
போடாதவன் பித்தன்!
- மோகன்
--------------------------------------
இதுதான் உலகம்
சட்டை இல்லாதவனைச் சட்டை செய்யாதாம்
சட்டையோடு கோட்டு போட்டால் தலைக்கனமாம்
குட்டக் குட்டக் குனிந்தும் கொள்ளும்
கோபம் வர பாரதியாய் மீசை முறுக்கும்
கட்டை பிரம்மசாரியா ? கையாலாகதவன் எனும்
கல்யாணமானவனைக் கண்டு கைகொட்டும்
சொட்ட நனைந்த பின்னர் குடை வேணுமா? கேட்கும்
சொல்லிக் கொண்டே போகலாம் இதுவே உலகம்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment