Sunday, September 1, 2024

பாலை (I)

 

பாலை - ஸ்ரீவி


இயற்கையன்னை கொடையாய் அளித்த

நிலப்பரப்பில் வறட்சியின் இருப்பிடம்

வெப்பத்தின் உறைவிடம்

நீரில்லா மணற்பரப்பில்

கானல்நீரே

காணக் கிடைக்கும்

வெப்பக் காற்றில் உடலே தகிக்கும்.

ஈக்கி மணலும்

அனல்போல் எரிக்கும்

யார்யார் வாழ்விலோ பொன்மழை பெய்தாலும்

பாலைவனத்தில் ஒட்டகம் மட்டும் பொதி சுமக்கும்.

 

மதிகெட்ட மனித குலத்தால்

பிற திணைகளும் பாலைகளாகும்

பாலைவனமே உலகம் என்றால்

உயிர்கள் எப்படி

உலகில் வாழும்?


 -------------------------------------

 

பாலை - சாய் ராம்

பாலை நம்மை காய்ச்சி எடுத்தால்-வறட்சி...

பாலை நாம் காய்ச்சி புது மனைபுகுதல்-மகிழ்ச்சி



--------------------------------

காடு இல்லை!

மலை  இல்லை!

குறிஞ்சிக்கும்

முல்லைக்கும்

இடைப்பட்ட

பாழ் நிலமாம் பாலை!

சொன்னதே

சங்க கால ஓலை!

 

உடல் வெப்பமானால் ஜுரம்!

மலையும் காடும்

மழை குறைந்து

மண் வறண்டு

வளி வறண்டு

வெப்பமானால் சுரம்!

நீர் குன்றி

பாலை - சங்கீதா

பசுமை குன்றிய

சுரமதில்

சுடச் சுட வாழ

வேண்டும் நெஞ்சுரம்!

மாலையில் குளிரடிக்கும்

பாலையும் உண்டாம்!

 

"அடி கள்ளி" என்று

செல்லமாகக் கொஞ்சுவதில்

இருக்கிறதே செல்லமான வஞ்சம்!

அங்கு இல்லையாம் லஞ்சம்!!!!!

ஒட்டகப் பாலை அருந்தி

கடும் பாலையில் வாழ

போகலாமா???

என்ன சொல்கிறது உங்கள் நெஞ்சம்??? 

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...