-----------
வளர்ச்சியா! வறட்சியா!!
------------
விளையாண்டு மகிழ்ந்த மைதானங்கள்
விண்ணை முட்டும் வணிக
வளாகங்கள் ஆகின.
வளர்ச்சி என்ற பெயரில்
வாழ்க்கையின் குதூகலங்கள்
மறைந்து
வறண்டும் போயின!
இது வளர்ச்சியா..!
வறட்சியா....?
கூறிடுவீர் அறிவுசால் ஆன்றோரே!
உங்கள் தோழன் ஸ்ரீவி
---------------------------------------
வளர்ச்சி அரிதாரம்
ஏரிகள், நீர்நிலைகள் எங்கே போயின?
எல்லாம் கட்சிகளின் வாக்குகள் ஆயின
மாரி அது பெய்தால் தேங்கவோ இடமில்லை
மறைந்து போகுது மழைநீர் ஓடும் பாதை
வேரோடு மரங்களின் படுகொலை தொடருது
வெறும் புல்லைக் காட்டி கலைநயம் என்குது
போராளி என எண்ணிக் கொடுத்தால் அதிகாரம்
புவியின் வளங்கள் பங்கு போடுகிறார் அநியாயம்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment