கண்முன்னே ஒன்று
அண்டம், பேரண்டம் அலசி ஆய்ந்தோம்
அதிலுள்ள அழியாத் துகள்கள் வியந்தோம்
கண் முன்னே ஒன்று கடந்து போகிறோம்
கத்தரி இலையை ஒத்ததாம் அதுவும்
வண்டி வண்டியாய்ச் சத்துக்கள் கொண்டது
வயிற்று உபாதைக்கு மிகவும் நல்லது
பெண்கள் பிரச்சினை பெரிதும் தீர்க்கும்
பிரியா இருமல், சளியும் தொலையும்
குண்டானவரின் கொழுப்பைக் குறைக்கும்
குழந்தைக்குப் பழக்க கூடும் ஆரோக்கியம்
உண்டது எதையும் செரிக்க உதவும்
உள்ளது வைட்டமின் B உம், C உம்
சண்டை போடும் நோய் எதிர்ப்புச் சக்தி
சத்தியமாய் உளது இதில் தான் மிகுதி
சுண்டைக்காய் அது தான் இது வரை சொன்னது
சுறுசுறுப்பாக வைக்கும் பாட்டியும் சொன்னது.
__ குத்தனூர் சேஷுதாஸ்
தண்டம் தொடர்கிறது....
அண்டையில் உள்ள சுண்டையை விட்டு அண்டம் அகழ்ந்தோமே
தண்டமாய் இருந்தாலே போதுமே!
தண்டங்களைத் தாங்கும் அண்டமோ
பிரம்மாண்டம்!
பிண்டமாய் உருவாகி
ஊண் பிண்டங்களால்
ஊன் வளர்த்து
அண்டத்தையே ஆள நினைக்கின்ற துண்டங்களாக்கும்
தண்டங்களால்
பிற தண்டங்களுக்கும்
பிற இனங்களுக்கும் கண்டம்!!!😳
- சங்கீதா
-----------------------------------
அண்டம்
பேராண்டம்
தண்டம்!
--------------
அண்டம் என்றால் வித்து எனவும் பொருள்
கொள்ளலாம்-
சிறிய வித்துலிருந்து
பெரிய உருவாக்கம்-
ஆலமரம் ஓர் உதாரணம்.
பேரண்டம் என்றால்
பெரிய அண்டம், பல அண்டங்களைக் கொண்டது.
தண்டம் என்பது இவைகளோடு ஒத்து ஒலித்து('Rhyming' )
ரசிக்க வைக்கிறது.
ஆனால் இந்த "தண்டம்" வீண் அல்ல.
தண்டம் என்றால் மர தடி அல்லதுகைத்தடி எனப் பொருளுண்டு.
இதை செங்குத்தாக "பிடிப்புகளின்றி"
நிற்க விட்டால் அப்படியே கீழே விழும்
-அகங்காரமின்மயை ,குறிக்கும்.
" தண்டம் சமர்ப்பிப்பது" என்பது
ஆண்டவனுக்கோ அல்லது குருவுக்கோ
"நெடுஞ்சாண்கிடையாக" அகங்காரமின்றி
உடலின்எட்டு அங்கங்களும் தரையில்
படும்படி விழுந்து வணக்கம் செலுத்துவது.
- மோகன்
No comments:
Post a Comment