கௌரவம்
காம்புக்கு வேறென்ன வேண்டும் கௌரவம்?
கருஞ்சிவப்பு ரோஜா பூத்தால் போதும்
பாம்புக்குச் சிறப்பு பரமசிவன் கழுத்து
பைந்தமிழ்த் தனித்துவம் " ழ " அவ்வெழுத்து
ஆம்பூர் அடையாளம் பிரியாணி, (திரு).சுலைமான்
ஆளுனர் மாளிகை அழகூட்டும் கலைமான்
வீம்பாம் இக்கவிதையும் படிக்க வைக்கும்
வெல்லத் தமிழே தருமாம் கௌரவம்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment