பனி படர்ந்ததோர் அழகிய காலை
பறவைகளின் கானம் கீச் கீச் என ஒலிக்க
இயற்கையில் மெய்மறந்த ஒரு கணத்தில்
இனிய நனவைக் கலைத்துச் சென்றது
புகை படர்ந்த வாகனம் ஒன்று
புது ஒலிப்பானின் கீய்ங் கீய்ங் என்ற ஒலியோடு...
- அமுதவல்லி
அட... கட்டிடங்கள் மறைந்த மாயமென்ன?
வானம் பூமியில் இறங்கிவிட்டதோ???!!!!
அல்லது
பனிக்கு பணிந்து
கட்டிடங்கள் கறைந்து போனதோ??!!!
மேகமும் பனியைப்
போர்த்திக் கொண்டதோ?
வானம் தன் வண்ணத்தை
இரவல் கொடுத்ததோ???!!!
--------------------
ஏழு குதிரைகள் பூட்டிய
ரதத்தில் பகலவன்
ஊர்வலம்...(இன்று ரதசப்தமி)
எல்லா பனியும்
அடுத்த குளிர்காலம்
வரும்வரை எங்கே வசிப்பது என்று விடியற்காலை
மாநாடு போட்டதோ?
- சாய்கழல் சங்கீதா
-------------------------------------
மனிதன் இயற்கையை
சீரழிப்பது கண்டு
இயற்கையன்னை
மனம் வெதும்பி விடும்
பெருமூச்சே
பனிமூட்டமாய்
காட்சிதனை மறைக்கிறதோ!
கண்மூடி
வெறியாட்டம் போடும்
மனிதனுக்கு
எச்சரிக்கைக் கொடுக்கிறதோ!?
- ஸ்ரீவி
----------------------------------------------
இனி இவ்வாறே போலும் !
என்ன ஆச்சு இன்று இந்த சென்னைக்கு?
எழவில்லை இன்னும் எட்டு மணி ஆச்சு
சன்னமாய் எங்கும் மூடுபனிப் போர்வை
சந்தித்த மார்கழியும் இதுபோலில்லை
தின்ன இரை தேடப் போக முடியவில்லை
திகைக்கும் மைனாக்கள் புரியவில்லை
கன்னத்தில் கை வைத்தக் காகம் பேசும்
" கலிகாலம் இனி இவ்வாறே போலும் "
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment