Monday, February 3, 2025

பனி படர்ந்ததோர் அழகிய காலை

 பனி படர்ந்ததோர் அழகிய காலை

பறவைகளின் கானம் கீச் கீச் என ஒலிக்க

இயற்கையில் மெய்மறந்த ஒரு கணத்தில் 

இனிய நனவைக் கலைத்துச் சென்றது

புகை படர்ந்த வாகனம் ஒன்று

புது ஒலிப்பானின் கீய்ங் கீய்ங் என்ற ஒலியோடு...

- அமுதவல்லி


அட... கட்டிடங்கள் மறைந்த மாயமென்ன?

வானம் பூமியில் இறங்கிவிட்டதோ???!!!!

அல்லது

பனிக்கு பணிந்து

கட்டிடங்கள் கறைந்து போனதோ??!!! 

மேகமும் பனியைப் 

போர்த்திக் கொண்டதோ?

வானம் தன் வண்ணத்தை

இரவல் கொடுத்ததோ???!!!


--------------------

ஏழு குதிரைகள் பூட்டிய

ரதத்தில் பகலவன்

ஊர்வலம்...(இன்று ரதசப்தமி)

எல்லா பனியும்

அடுத்த குளிர்காலம்

வரும்வரை எங்கே வசிப்பது என்று விடியற்காலை

மாநாடு போட்டதோ?


- சாய்கழல் சங்கீதா

-------------------------------------

மனிதன் இயற்கையை

சீரழிப்பது கண்டு

இயற்கையன்னை

மனம் வெதும்பி விடும்

பெருமூச்சே 

பனிமூட்டமாய்

காட்சிதனை மறைக்கிறதோ!


கண்மூடி

வெறியாட்டம் போடும்

மனிதனுக்கு

எச்சரிக்கைக் கொடுக்கிறதோ!?

- ஸ்ரீவி

----------------------------------------------

இனி இவ்வாறே போலும் ! 


என்ன ஆச்சு இன்று இந்த சென்னைக்கு? 

   எழவில்லை இன்னும் எட்டு மணி ஆச்சு


சன்னமாய் எங்கும் மூடுபனிப் போர்வை

   சந்தித்த மார்கழியும் இதுபோலில்லை


தின்ன இரை தேடப் போக முடியவில்லை

   திகைக்கும் மைனாக்கள் புரியவில்லை


கன்னத்தில் கை வைத்தக் காகம் பேசும்

   " கலிகாலம் இனி இவ்வாறே போலும் "


__  குத்தனூர் சேஷுதாஸ்



No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...