தியாகிகள்தினம்
----------------
இன்று
ஒரு நிமிடம் கண்கள் மூடி இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் காலை, இமைகளை
உடைத்துப்பீரிட்டுப்
பாய்கிறது நெஞ்சு நிறை
கண்ணீர்!
இவர்கள்
தலை சாய்ந்தாலும்
நம்தலை நிமிர்ந்து
நடப்பது இவரலாறன்றோ!
இவர்கள் சிந்திய இரத்தம் நம்மகளிர்
நெற்றிகளில், குங்கும பொட்டாக, மங்கல சின்னமாக மாறி விட டது.
கத்தியின்றி இரத்தமின்றி இவர்கள்
செய்த யுத்தம்
கல்வீசி சாலை மறியல்
செய்யும் போராளிகளை சற்றே உள்நோக்கி மாற வைத்தால், அது
தியாகிகளுக்கு வருடம்
முழுவதும் செலுத்தும்
அஞ்சலி ஆகும்.
- மோகன்
-----------------------------
தியாகிகள் தினம் (30, ஜனவரி)
சத்தியம், நேர்மை, வாய்மை அடிநாதமாம்
சாகும் வரை அதை விடாப் பிடிவாதமும்
இரத்தம் சிந்தா அஹிம்சை இவர் ஆயுதம்
இராமன், ஹரிச்சந்திரா பிடித்த பாத்திரம்
சுத்தும் கைக் கொண்டு நூல் நூற்கும் இராட்டை
சுலபமா வெள்ளையரை விரட்டும் வேட்டை?
உத்தமராம் காந்தியை நினைவு கூர்வோம்
உடன் நின்ற தியாகிகள் ஒருநாளும் மறவோம்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment