தேசிய பத்திரிகைகள் தினம் இன்று
---------------------
ஐனநாயகத்தின் நான்காவது அதிகாரம்
பத்திரிகை/ ஊடகம்.
ஆனால் மற்ற அதிகாரங்களை விட
வலிமை வாய்ந்தது;எழுதுகோல் வாளை விடக் கூர்மை அல்லவா!
"மக்கள் குரலே( தமிழ் பத்திரிகைஅல்ல) மகேசன் குரல்" என்ற ஐனநாயகத்தின் எழுத்து வெளிப்பாடு.
நாம் சுதந்திரக் காற்றை இன்று சுவாசிக்க, அன்றே
ஆங்கில பீரங்கிகளை
எதிர்கொண்ட, எழுதுகோல்களாம், சுடுகலன்கள்!
லஜ்பத் ராய், திலகர், நமது பாரதி போன்ற எழுச்சி,
எழுத்துப் போராளிகளை
நினைவு கூறும் நாள்.
மின்னஞ்சலில் " அட கடவுளே" என்று கூட எழுத நேரமின்றி"omg" எனத் "தட்டிடும்"
இளைய தலைமுறை
காகிதமும் பேனாவும்
கொண்டு எழதப்பழக வேண்டும்.
பழகிப் பாருங்கள் மக்களே!
பிடித்துப்போகும்!
பரிமாண மாற்றங்கள
மனதில் உதிக்கும்.
---------------
எழுத்து வடிவில் எண்ணங்களைப் பதிவு
செய்வதை ஆங்கிலத்
தில் to put in black and white என்பார்கள.
அப்படித்தான் அக்கால பத்திரிகைகள் உணமையை கறுப்பு மை மூலமாக,மையப்படுத்தின.
ஓரிரு "மஞ்சள்" பத்திரிகைகளும் உண்டு!😊
இன்று செய்திகள்
பல்வண்ணங்களில்
தரப்படுகின்றன.
எதை எடுப்பது?
எதை விடுவது?
எங்கள் இளமைக்காலங்களில்
காலையில் பில்டர் காப்பியோடு, ஆங்கிலப் பத்திரிகை படித்து ஆங்கிலமும்
கற்றோம்.
இன்று? பத்திரிகைகளில் கசடு தான் நிறைய; கசடறக்
கற்பது எங்ஙனம்?
நவ 16ஆ். ஜன 29 ஆ?
" தினசரிகள்" தானே!
தினமுமே கொண்டாடலாமே!
-மோகன்
---------------------------
பாவம் பத்திரிகை
பத்திரிகை ஊடகம் பொறுப்பு அன்று அதிகம்
பலருக்கும் செய்திகள் கொண்டு சேர்க்கும்
சத்தியமாய் உண்மைச் செய்திகளே வரும்
சரித்திரம் படைக்கும், அரசியல் மாறும்
கத்தியாய், ஈட்டியாய்க் கட்டுரைகள் வரும்
கயிற்றின் மிசை நடக்கும், கதிகலங்கும் அரசும்
கத்தும் சேவல், உடன் இது வரத் தொடங்கும்
காபியும் இதுவும் நல்ஜோடிப் பொருத்தம்
தித்திக்கும் திரைப்படக் கிசுகிசுக்கள் வரும்
தேநீர்க் கடைகளில் விற்பனையும் கூடும்
குத்தனூர்வாசிக்கும் நாட்டு நடப்புத் தெரியும்
கொலை, கொள்ளைகள் அங்கும் நிகழும்
மொத்தமும் இன்றோ தலைகீழாம்
மொபைல் பிடித்தது அதன் இடமாம்
அத்தனையும் இத் தலைமுறை பொய்யே என்னும்
ICU இல் இருக்குமது எத்தனை நாள் இன்னும்?
__ குத்தனூர் சேஷுதாஸ்
சூடான காபியுடன்
சுடச்சுட பரபரப்பான செய்திகள் அன்று!
சுடுதண்ணீரைக் காலில்
கொட்டியது போல்
சடாரென்று படபடக்கும் செய்திகள் இன்று!( Tv flash news)
உண்மை செய்திகள் மட்டும் அன்று!
உளறும் செய்திகள் இன்று!
தரம் அன்று தாரக மந்திரம்!
" ரேட்டிங்" ஏற்றுவதே இன்றைய தந்திரம்!
சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment