பலருக்கு விருப்பம்
உன்னை அடைய;
எனக்கு மட்டுமே உரிமை
உன்னை காக்க,
மலரிடம் சொன்னது முள்!
- தியாகராஜன்
முள்ளின் பதில்
மலரது வாய் நெகிழ மணமும் அவிழும்
மறைந்துள்ளிருக்கும் தேனும் கசியும்
பல கைகள் அதைப் பறிக்க உடன் நீளும்
பாதுகாக்கும் முள்கள் முனியும், சீறும்
உலவித் திரியும் வண்டோ ஓடோடி வரும்
உட்கார்ந்து தேனுண்டு உறங்கியும் போகும்
அலரும் கை இப்போது முள்ளோடு வாதிடும்
"அதனால் நடக்குது இனப்பெருக்கம்" பதிலும்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
----------------------------------------
பேச வேண்டியதை மட்டும் பேசு....
மனதிலிருந்து, யதார்த்தமாக பேசு.....
அப்படி பேசினால் நீ பேசும்போது மற்றவர்கள் கடிகாரத்தை அடிக்கடி பார்ப்பதை தவிர்க்கலாம்.......
😊 சாயி 😊
-----------------
முள் மனசாட்சி
நம்"முள்" தான் இருக்கும்
வழி தவறினால்
முள்ளாகிக்
குத்தும்!
வேலியாம் இதுவே..
மனம் அலைபாயும்
ரோஜா செடி நாமே!
சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment