π•π•π•π•π•π•π•π•π•π
*கற்கை நன்றே!*
π•π•π•π•π•π•π•π•π•π
பிச்சை புகினும் கற்கை நன்றென
ஔவைப் பிராட்டி அன்றே சொன்னாள்
பச்சை பசேலென வாழ்வு செழிக்க
கற்றலே தேவையென நன்றே சொன்னாள்
வறுமையை விரட்டும் வலிய ஆயுதம்
பெருமையைக் கொணரும் அற்புத அமுதம்
இருள் நீக்கி அறியாமையை விரட்டும்
அருள் திரண்டு ஏழ்மையைத் துரத்தும்
படிப் படியாய் வாழ்வில் முன்னேற
படிப்பு ஒன்றே அடித் தளமாம்
துடிப்போடு நீயும் படித்திட்டால்
அகிலமே உனக்குப் படியுமாம்!
ஆதலால்,
படி படி தம்பி
விடாமல் படி
வெறியோடு படி
படிப்பே உனக்கான
வெற்றிப் படி!!
*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*
No comments:
Post a Comment