விழைந்தது மலர்ந்தது
குடிக்க நீர் கேட்டுக் கதவைத் தட்டினார்
கொடுத்த சோறுண்டு சதியும் தீட்டினார்
அடி மடியில் கை வைத்தார் கதையே போலாம்
ஆங்கிலேயர் நமை அடிமை கொண்டதாம்
வடித்த இம் மண்ணார் கண்ணீர், குருதி
வான்மழை வருமே அதனினும் மிகுதி
வெடிக்கப் புரட்சி அன்னார் விரைந்தார் தாயகம்
விழைந்த குடியரசு மலர்ந்த நம் பாரதம்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
------------------------------
நமது குடியரசு தினம்.
-------------------
இந்தியக் குடிமக்கள்
நாம்நெஞ்சை நிமிர்த்தி
தோளோடு தோள் சேர்க்கும் தினம்.
வருடாவருடம் வந்தாலும்
நமது தேசிய உணர்வைத்தூண்டும்
புதினம்.
நமது குழம உறுப்பினர்
யாவரும் இந்தியக் "குடியரசில்" பிறந்த
சுதந்திர சுவாசிகள்👌👏👏
நினைக்கையிலேயே
நெஞ்சம் விம்முகிறது.
"செப்பும் மொழி" பலவாயினும்
"நம்சிந்தை ஒன்று"தானே!
இருகரங்கூப்பி
வணங்குவோம்
நம் பாரத, தாயை!
நம் கரங்களில் எந்த தளையுமின்றி!
- மோகன்
---------------------------------------
No comments:
Post a Comment