தேன் உறிஞ்சிய எந்தத்
தும்பியும் (தேனி) செடியிடம் துக்கம்
விசாரிக்க வரவில்லை...
பூ உதிர்ந்த போது!
-தியாகராஜன்,
ஆயினும் அவைகள் மனிதர்கள் போல் உண்ட வீட்டுக்கு துரோகம் செய்வதில்லை!
மலரின் காலம் முடிந்தது!
கீழே அதுவும் உதிர்ந்தது!
தானே மண்ணில்
விழுந்தது!
தேனீக்களுக்கு மனித குணம் இருப்பின்
தேனி உறிஞ்சிய கையோடு
காம்பைக் கிள்ளி மலரை கீழே தள்ளியிருக்கும்!
ஐந்தறிவு எதுவும் இயற்கையின் சமநிலையை சீர் கெடுப்பதில்லை..
ஆறறிவோ...?
- ஸ்ரீவி
தேனை உறிஞ்சிய தேனீ அப்பூவின் மகரந்தத்தை அள்ளிச் சென்று
சற்று தள்ளிச் சென்று வேறு பூவில் சேர்த்து
அப்பூவின்/ செடியின் இனம் பெருக உதவியதல்லவா?
தேனீ
பரலோகம் செல்கையில் அப்பூவும் செடியும் துக்கம் விசாரிக்கப் போவதில்லை!
இருவரும் எடுத்தனர்! இருவரும் கொடுத்தனர்!
இயற்கையின் நியாயத் தராசு எந்தப் பக்கமும்
சாய்வதில்லை!
மனிதனும் ஓரிடத்தில் எடுத்தால் அவ்விடம் திருப்பவில்லையெனில்
வேறு இடத்தில் எடுக்கப்படுமன்றோ!
- சங்கீதா
ஐந்தறிவு இயற்கை வகுத்த கடமையை செய்து வளம் தரும்
ஆறறிவு இயற்கைக்கு கொடுமை செய்யாது இருந்தாலே வளம் கெடாது
- அமுதவல்லி
விசாரிக்காது!
ஏனெனில் 'மகரந்தச்சேர்க்கை'( pollination) செய்ய உதவுவதால் மலருக்கும்/ செடிக்கும்
தேனிகளிடம் உள்ள உறவு பரஸ்பர நன்மைக்காக.
- மோகன்
வண்ண இதழ்களைக் கொண்டு தேனீக்களை ஈர்த்தேன்
என் இனம் பெருக உழைக்கும் உனக்காக பழரசம் கொடுத்தேன்
உன் இதழ் பட்டதால் தித்திக்கும் பழரசம் சுவை மிகுந்த தேனாக மாறியது
நீ அடைந்த இன்பத்தை பிறருக்கும் பகிர்ந்தாய்
ஒரு நாளில் மறையும் எனக்கு உன்னால் ஓங்கும் புகழ் கிடைத்தது
- சுல்தானா
No comments:
Post a Comment