நிறம் மாறும் மனிதா!
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பாய்
எல்லா உன் பிள்ளைகள் கான்வென்ட்டில் கற்பார்
சிங்கமென சிறு தானியம் சிறந்ததென முழங்குவாய்
சிறிது நேரம் கழிய பீஸாவைக் கேட்பாய்
தங்கம் மேல் மோகம் தவிர்க்க வேண்டும் என்பாய்
தவறாது அதை அட்சயதிருதியில் வாங்குவாய்
பெங்களூரில் உள்ள போது காவிரி தனதென்பாய்
பேச்சிப்பாறையிலோ மூர்ச்சையாகி விடுவாய்
உங்க வீட்டுப் பிள்ளை என ஓட்டும் கேட்பாய்
ஓரைந்து ஆண்டுகளும் ஓடி ஒளிவாய்
பொங்கலன்று மட்டும் உழவைப் போற்றுவாய்
பொன்னான மற்ற நேரம் கிரிக்கெட்டில் மறப்பாய்
திங்களென மங்கையரைக் கவிதையில் வர்ணிப்பாய்
தினம் தொலைக்காட்சியில் திட்டும்படி சித்தரிப்பாய்
அங்கமெல்லாம் மனிதா ! ஓடுவது குருதியா!
அடிக்கடி நிறம் மாறும் நீ ! பச்சோந்தியா?
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment