★●★●★●★●★●★●★●★●★●
ஐயன் வள்ளுவன் தாள் பணிந்துப் போற்றிடுவோம்!
★●★●★●★●★●★●★●★●★●
௳லகப் பொதுமறை தந்திட்ட
உத்தமனாம் வள்ளுவதேவன்
உலகம் உய்யவே நம்மிடையே
உதித்திட்ட நந்நாள் தானிது..
அகம் பொருள் இன்ப மென
முப்பாலை முத்தான தமிழிலே
தெளிதேனுடன் கலந்தளித்த
அய்யன் தோன்றிய தினமிது..
ஐயன் வள்ளுவனின் தாள்
பணிந்துப் போற்றிடுவோம்..
தமிழ் நாட்டின் பெருமைபேண
சபதம் நாமும் ஏற்றிடுவோம்.!
விழிப்புடன் நாம் இருந்திடுவோம்
துடிப்புடன் தமிழ் காத்திடுவோம்
வந்தாரை வரவேற்போம் ஆயினும்
தமிழை அடக்கியாள அனுமதியோம்!
எத்திசையும் தமிழ்மணக்கச் செய்திடுவோம்
எக்கணமும் தமிழோசை ஒலிக்கச் செய்வோம்
தெக்கணமும் அதிற்சிறந்த நம் தமிழ்நாடும்
எப்போதும் வான்புகழ் கொள்ள வழிவகுப்போம்.
பிறப்பால் அனைவரும் ஒன்றெனச் சொன்ன
ஐயன் வள்ளுவனை நினைவில் நிறுத்தி
வாழிய வள்ளுவன் புகழ்!
வளர்க தமிழ்த் திருநாடு!!
என்று நாமும் முழங்கிடுவோம்..
உங்கள்_தோழன்_ஸ்ரீவி
No comments:
Post a Comment