இன்று மாட்டுப் பொங்கல்
வேளா வேளை நாம் உண்ணும் உணவது
வியர்வையால் வருவது, உழவு ஈவது
காளைகள், பசுக்கள் கட்டாயம் காரணிகள்
கண் முனே கடவுளென தொழுதார் முன்னோர்கள்
தோள் கொடுக்கும் அவைகளைக் குளிப்பாட்டுவார்
தூபம் காட்டி வணங்குமுன் அழகூட்டுவார்
மூளை முழுதுமான வள்ளுவன் போற்றிய தொழில்
முன்னோர் அடியொற்றி இன்று மாட்டுப் பொங்கல்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
----------------
👍🙏
பசு என்ற சொல்லுக்கு
உயிர்(கள்) என்ற பொருளும் உண்டு.
பசுக்களின் மீது பாசம்
வைப்போம்; நேசிப்போம்;பாதுகாப்போம்.
இன்று சகோதர நலம்
வேண்டும் 'கனு' பொங்கலாகவும் சிலர்
கொண்டாடுவதும்
உண்டு.
அலங்கார இலக்குமிகளாக ஆநிரைகள் கழுத்தில்
கிண்கிணி மணிகள்
ஒலிக்க, பசுக்காவலர்கள் பெருமிதமாக , பின்னே
ஓடி வர இவை வீடு வீடாக நின்று 'வந்தனம்'
பெற்று ,தலையாட்டி மகிழ்ந்து ஓடும் காட்சிகள் கண் முன்னே.
"வள்ளல் பெரும் பசுக்கள்"
வணங்குவோம்.
--மோகன்
No comments:
Post a Comment