Sunday, January 12, 2025

தேசிய இளைஞர் தினம்:

 தேசிய இளைஞர் தினம்:

********

அன்னியன் ஆட்சியில்

அடக்கப்பட்ட இந்து

மதம் தனை அந்நிய நாட்டிலேயே சென்று

அவன் மொழியிலேயேஇந்து மதப்பெருமைகளைப்

பரக்க , உரக்கப்பேசி

வையம் அறியச்செய்தவர்,

ஊடகங்கள் உதவி இன்றி.


""எழுமின் விழிமின்

என உறங்கிக் கிடந்த

இளைஞர்களை உசுப்பி எழச் செய்தவர்


அவர் உலகு உய்ய உதித்த 12 ஆம் திங்கள் ஜனவரி, தேசிய இளைஞர்

தினமாக, கொண்டாடப்படுகிறது


39 வயதில் பூத உடலை விடுத்து, புகழுடம்பை அடைந்த

என்றும் இளமையுடன்

திகழ்ந்து அறிவையும்

ஆனந்தத்தையும் ஊட்டும் அமர இளைஞர்.


நம்ம சென்னைக்கு ஒரு பெருமை-

அவர் வெளி நாடு செல்ல உதவியது தமிழர்களே. 

அந்த நன்றி பாராட்டி

அவருடைய அகில வெற்றிப்பயணம்

முடிந்ததும் சென்னை வந்தார்.

அதன் நினைவாக

சென்னைக் கடற்கரையில் விவேகானந்தர் இல்லம்

கம்பீரமாக அமைந்திருக்கிறது.


உன்னை அகழ் உன்னை உணர்வாய்

உன்வலிமை உனக்குத்

தெரியும் என்று இளைஞர்களுக்கு

அவர்கூறியது

இன்றைய இளஞைர்

குழாம் உளமேற்கொண்டு

பின்பற்ற வேண்டிய

தலையாய அறிவுரை.


பெண்ணுரிமை, மன வலிமை என்பன போன்ற பல  கொள்கைகளில்

ஸ்வாமி விவேகானந்தருக்கும்

மகாகவி பாரதிக்கும் ஒற்றுமைகள் பலப்பல.

மிக்பெரிய ஒற்றுமை

இருவரும் இளம்வயதிலேயே மறைந்தனர். ஒருவர் அமர சன்னியாசி; மற்றவர் அமரகவி.

இறைவனுக்கும் இளைஞர்களை மிகவும் பிடிக்கும் போலும்!

ஒரே வேற்றுமை-

அவர் காவி முண்டாசு

அணிந்தார்

இவர் வெள்ளை முண்டாசு!


- மோகன்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...