Monday, January 6, 2025

செருக்குடன் சொல்வேன்...

 செருக்குடன் சொல்வேன்... 


கொம்பனாம் நேற்றவர் இன்றில்லையானார்

   குவலயத்தின் பெருமை ஈதென்றார் வள்ளுவர்


கம்பனும், பாரதியும் காணாமல் போனார்

   கண்ணதாசன், வாலி அவ்வாறே ஆனார்


தம் மொழியை இவர்கள் தாயாய் கொண்டாடினார்

   தமிழர்கள் மனதில் இன்றும் வாழ்கிறார்


செம்மொழி நம் தமிழைச் சிரமேற் கொண்டேன்

   செருக்குடன் சொல்வேன் நானும் வாழ்வேன். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...