கடந்து வந்த விளக்குகள்
தெருவிளக்கில்லாத காலம் அன்றாம்
தினம் வரும் திங்களும் ஓடி ஒளியுமாம்
திரியிட்ட தீபங்கள் அந்தியில் உயிர்ப் பெறும்
திண்ணையில் படுக்கும் வரை நின்று எரியும்
விருந்தினர் வருவதும் அடிக்கடி நிகழும்
விளக்கைச் சுற்றி உண்போம் உணவும்
இருளில் மிதிவண்டியில் தனியே போவோம்
எம்ஜிஆர் பாடல்களே துணையாய்த் தொடரும்
துருப் பிடித்த அவ் வண்டியின் சத்தமே போதும்
தொலைவில் வருவோர்க்கு சமிக்ஞை செய்யும்
வரப் பிரசாதம் பின்னர் டைனமோ வந்தது
வண்டியின் வேகம் கூட ஒளியும் கூடியது
அரிக்கேன் விளக்கு அடுத்து உதவ வந்தது
அதில் படித்தே வேலை, பெண்ணும் கிடைத்தது
கரும்பாம் அக்காலம் திரும்ப தான் வருமா?
கண்ணாடி இலாச் சிறாரைக் காண முடியுமா?
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment