கண்ணாடி
--------
கண்ணாடி என்பது பிரதிபலிப்பின் உருவகம்.
நாம்அதன்எதிரே நிற்கையில் நம் "பிரதிபிம்பத்தை"
உள்ளது உள்ளபடி காட்டும்; நரை , திரை,
மூப்புகளுக்கு மேல்போச்சு போடாமல். சமநிலை காட்டும், எதிர்பார்ப்புகள்இன்றி. அதனுடன் மனம் விட்டுப்பேசலாம்.
கண்ணாடியை நாசூக்காக , கையாளவேண்டும. இல்லை எனில் உடையும் , பல துண்டுகளாக.
"எல்லா உறவுகளும்
கண்ணாடி
போலத்தான் ."
நம்நடத்தையின்பிரதிபலிப்பாக, நல்லுறவுகள் உறவுகள்
உருவாகின்றன.
எதிர்பார்ப்புகள் இன்றி,"நாசூக்காக' கையாண்டால் உறவுகள் நன்கு வளரும். 'அழுத்தம்' கொடுத்தால், உடையும்
அல்லது விலகிச்செல்லும்.
கண்ணாடியை சரியான இடத்தில் , சரியான கோணத்தில் அமைத்தால் அறை முழுவதையும் நன்கு காட்டுவது போல, உறவுகளையும் வைக்கும் இடத்தில்
வைத்து, சரியான கோணத்தில் கையாண்டால், சண்டை சச்சரவுகளோ,
நச்சரிப்பகளோ வாரா.
- கண்டாடி பற்றிய என் பிரதிபலிப்பு( Reflections!)
- மோகன்
No comments:
Post a Comment