இன்று இளவரசிகள் தினமாம்
என் நினைவிலே மூன்று இளவரசிகள்.
முதல் இளவரசி என்னைப்
பெற்ற தாய்.
பத்து மாதம் சுமந்து பெற்று
பாலூட்டி சீராட்டி வளர்த்த உன்னை
வாழ்த்த வயதில்லை
வணங்குகிறேன்.
இரண்டாம் இளவரசி
என்னை மணந்த என் மனைவி.
கட்டிக் களி மண்ணாக இருந்த
என்னை ஊரார் மெச்சும் அழகிய
பாண்டமாச் செய்தவள்.
உனக்கு நான் என்ன கைமாறு
செய்யப் போகிறேன்.
உன்னை மேலும் வருத்ததாமல்
இருந்தாலே போதும்.
மூன்றாவது நான் பெற்ற இளவரசி.
நீ அன்றும் சரி இன்றும் சரி உன்
செல்லக் குறும்புகளாலும்
சேட்டைகளாலும் என்னை ஆட்கொண்ட நினைவுகள் என்றும்
பசுமை. எங்கள் இல்லத்தின் அழகிய இராட்சசி.
நீ என்றும் எங்கள் அன்பிற்கு இனியவளே.
பதிவிடும் அவசரத்தில் எங்கள் வீட்டு
இன்னொரு இளவரசியை மறந்து விட்டேன்.
"தாத்தா" என்ற உரத்த குரலுடன் என்னை மிரட்டி அவளுடன் விளையாட கட்டளை இடும் என் மற்றும் ஒரு தாய் என் செல்ல பெயர்த்தி.
No comments:
Post a Comment