ஐயோ ! அத்துமீறல்
வாரத் தொடக்க நாள் காகம் எங்கோ கரைந்தது
வாய் காபி கேட்க எழுந்து விட்டேன் விரைந்து
தூரிகையால் கீழ் வானில் சூரியன் ஏதோ தீட்டும்
துவண்ட இளமை ஆழ்ந்து துயிலும் நேரம்
பேரனும், நானும் நடந்து வரப் புறப்பட்டோம்
பேசியபடி வந்தவன் " பார் தாத்தா " சுட்டினான்
கீரி ஒன்று குட்டிகளுடன் களித்து விளையாடியது
கிரிக்கெட் சிறார்கள் விளையாடும் முட்காடு
லாரிகள், ஜேசிபி அணிவகுத்து வரக் கண்டோம்
லட்சங்கள், கோடியில் வீடு விற்கும் திட்டம்
" வாரி சுருட்டிக் கொண்டு எங்கவை போகும்? " பேரன்
வாயில் விடையில்லை பரிதவித்தேன் நானும்
ஆரிடம் போய்ச் சொல்ல இதெல்லாம் நிற்கும் ?
அதனிடத்தில் நாம் புகுதல் அத்துமீறல் ஆகும்
கோரிக்கை பிரமனிடம் வைத்தேன் நெஞ்சில் அடைப்பு
" கொஞ்சம் நிறுத்தி வையும் மனித குலப் படைப்பு ".
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment