அனைவரது வாழ்விலும் உண்டாம் புயல் காற்றுடன்
ஒரு பெரு மழை!
அழையா மழை!
விழையா மழை!
பெரு மழை தாங்கிடும் நம் வலிமை!
இதுவல்ல பெருமை!
பெரு மழைக்குப் பின்
மயான அமைதியாம்..
இதைக் கடக்கத் தான் வேண்டுமே
சிதையா மனத்துடன்
தனி வலிமை!
மழைக்கும் மயான அமைதிக்கும் பின்..
தழைக்குமே மீண்டும்
நம் வாழ்க்கை!
உழைக்குமாம் நம் மனம்...
புதிய பார்வையுடன்!
புதைந்த நினைவுகளுடன்!
முதிர்ந்த அனுபவத்துடன்!
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment