மொத்தமாய்.....
வேராம் பெற்றோர்களை விட்டுப் பிரிந்தேன்
வேறெங்கோ வந்து விரும்பியபடி வாழ்கிறேன்
ஊரை விட்டு வந்தேன் உறவுகள் மறந்தேன்
ஒன்றுக்கும் போகாமல் செலவைத் தவிர்த்தேன்
காரை நானே துடைத்தேன் கணிசம் சேமித்தேன்
கண் முன் யூ ட்யூப் போட்டு தர்ப்பணம் செய்தேன்
கீரைக்காரியிடமும் பேரம் பேசி வாங்கினேன்
கிழிந்த ஆடைகள் தாம் ஏழைக்குத் தந்தேன்
மோராய்ப் பெருக்கினேன், தயிரைத் தவிர்த்தேன்
முழு பூசணி வாங்கி மூன்று வாரம் ஓட்டினேன்
வாரம் ஒருமுறை முன்பு சகோதரியைச் சந்தித்தேன்
வருடம் என ஆக்கினேன் செலவழிக்க சிந்தித்தேன்
ஆரோ ஒருத்தி அன்று அலைபேசியில் அழைத்தாள்
அழகாகச் சொலச் சொல அப்படியே வளைந்தேன்
தோராயமாய் இழந்ததையும் பகிர மாட்டேன்
தொலைந்தன வாரா துவண்டு போனேன்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment