Saturday, November 23, 2024

காதுகள்

கவி கேளாய் !  - கவிதையின் தொடர் கவிதைகள்

கணேசன் ஐயா,

காது கொடுத்துக்கேட்டேன்

உமது படைப்பை உரக்கப்படித்து; செவிக்கு நல்ல உணவு!


இந்தக்காதுகளுக்குப் பல சிறப்புகள்:



-கணவர் சொல்லி

துணைவியர் காதுகளில்போடுவது

வைரத்தோடுகளை  மட்டுமே!


-ஆவணப்பதிவு அற்ற வரலாற்றுச்செய்திகள்

செவிவழிச்செய்திகள்

என்றே அறியப்படும்.


-தேன் பாயும் பிரதேசமாக, பாரதியும்

காதையே தேர்ந்தெடுத்தார்!


-கண்கள நன்கு நோக்க விழி ஆடிகளைத் தாங்கி

உதவுவது செவிகள் அன்றோ!


-நுண்ணறிவை செவிவழி பெறுவது

கேள்வி ஞானம் என்றே

போற்றப்படுகிறது.


-மருத்துவர் இதயத்துடிப்பை அறிய உதவும் குழல்களையும்

செவிகளில்தானே மாட்ட வேண்டும்!


தூண்டி விட்டீர்

செவிகளிப்பற்றி

சற்றே சிந்திக்க;

நமது பாரம்பரியங்களே

'கர்ண' பரம்பரையாக வந்தவைதாமே!


- மோகன்


----------------------

கெட்ட விக்ஷயங்களை கேட்காது....

வம்பர்களின் போலித் தகவல்களை படிக்காது.....

குடும்பத்தில் பிரிவினையை உண்டாக்காது.....

வயிற்றில் தேவையற்றவை அடைக்காது......

தீய பழக்கங்கள் பிடிக்காது.........

தீயவர் சொல் கேட்டு நடக்காது


இருப்பின் வாழ்க்கை சிறக்கும்...

காதில் விழுந்த செய்தியை காதுகொடுத்து கேளுங்கள்....

😊 சாயி 😊


----------------

வம்பு தும்புகள் வந்திடின்

கேளாச் செவியினராய்


அன்பு நிறை சொற்களையே

கேட்கும்

செவியினராய்


மனிதகுலம் இருந்திட்டால்

எல்லாம் நன்மையே

- ஸ்ரீவி

----------------------



No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...