கவி கேளாய் ! - கவிதையின் தொடர் கவிதைகள்
கணேசன் ஐயா,
காது கொடுத்துக்கேட்டேன்
உமது படைப்பை உரக்கப்படித்து; செவிக்கு நல்ல உணவு!
இந்தக்காதுகளுக்குப் பல சிறப்புகள்:
-கணவர் சொல்லி
துணைவியர் காதுகளில்போடுவது
வைரத்தோடுகளை மட்டுமே!
-ஆவணப்பதிவு அற்ற வரலாற்றுச்செய்திகள்
செவிவழிச்செய்திகள்
என்றே அறியப்படும்.
-தேன் பாயும் பிரதேசமாக, பாரதியும்
காதையே தேர்ந்தெடுத்தார்!
-கண்கள நன்கு நோக்க விழி ஆடிகளைத் தாங்கி
உதவுவது செவிகள் அன்றோ!
-நுண்ணறிவை செவிவழி பெறுவது
கேள்வி ஞானம் என்றே
போற்றப்படுகிறது.
-மருத்துவர் இதயத்துடிப்பை அறிய உதவும் குழல்களையும்
செவிகளில்தானே மாட்ட வேண்டும்!
தூண்டி விட்டீர்
செவிகளிப்பற்றி
சற்றே சிந்திக்க;
நமது பாரம்பரியங்களே
'கர்ண' பரம்பரையாக வந்தவைதாமே!
- மோகன்
----------------------
கெட்ட விக்ஷயங்களை கேட்காது....
வம்பர்களின் போலித் தகவல்களை படிக்காது.....
குடும்பத்தில் பிரிவினையை உண்டாக்காது.....
வயிற்றில் தேவையற்றவை அடைக்காது......
தீய பழக்கங்கள் பிடிக்காது.........
தீயவர் சொல் கேட்டு நடக்காது
இருப்பின் வாழ்க்கை சிறக்கும்...
காதில் விழுந்த செய்தியை காதுகொடுத்து கேளுங்கள்....
😊 சாயி 😊
----------------
வம்பு தும்புகள் வந்திடின்
கேளாச் செவியினராய்
அன்பு நிறை சொற்களையே
கேட்கும்
செவியினராய்
மனிதகுலம் இருந்திட்டால்
எல்லாம் நன்மையே
- ஸ்ரீவி
----------------------
No comments:
Post a Comment