புதினாவின் போதனை
குழந்தை முதல் முதியோர் வரை புதினா பிடித்த மணம்
" கொண்டா கொண்டா " என பசிப்பது இதன் குணம்
வழக்கமாய் உணவகத்தில் புதினா சட்னி இருக்கும்
வழித்ததை உண்டதும் மீண்டும் கேட்கத் தோன்றும்
பொழுது போகவில்லை புதினா கட்டு வாங்கினேன்
பொறுமையாகப் பிரித்து ஆயத் தொடங்கினேன்
அழுகிய இலைகளோ அம்புட்டு இருந்தன
அவை எலாம் நீக்கி மேலும் தொடர்ந்தேன்
புழு ஒன்று வழவழவென நெளிந்தது கருப்பாய்
பொத்தெனப் போட்டேன் நெளிந்தேன் வெறுப்பாய்
கழுவ இலைகளைக் கலயத்தில் நீர் விட்டேன்
கால் அளவு படிந்தது மண் அடியில் திடுக்கிட்டேன்
பழனி தேநீர்க் கடை போனேன் தோழருடன்
பச்சைப் புதினாவை வெட்டினார் "கட்டுடன்"
அழுகை வர உறுதி பூண்டேன் வெளியே இனி உட்கொளேன்
ஆசை அடங்காத போது விழி மூடிக் கொள்வேன்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment