நேற்றைய தினம் நடைபெற்ற
பூர்வா மூத்த மழலையர் ஏழாவது ஆண்டு விழாவின்போது வருகை
புரிந்த Senior kids எனும்
மூத்த மழலையர்களை வாழ்த்திப் பாடியதின் மறுபதிவு 😀😀
முத்தோர் சொல்லும்
முதுநெல்லிக் காயும்
முன்னே கசக்கும்
பின்னே இனிக்கும்
காத்து வளர்த்த
பெற்றோர் தம்மை
காத்து வளர்த்தால்
நன்மை நிலைக்கும்
வேர்வை சிந்தி
செய்த செயல்கள்
பின்னால் ஒருநாள்
காத்து நிற்கும்!
ஈர்த்து நீங்கள்
சொன்ன சொற்கள்
எந்த நாளும்
மனத்தில் ஒலிக்கும்!
பார்த்து வளர்த்த
செடிகள் பின்நாள்
வேலி யாகி
வயலைக் காக்கும்!
வார்த்து வளர்த்த
பெரியோர் உம்மை
வாழ்த்திப் பாடுதல்
எம்பணி யாகும்!
மார்பின் மேலே
தூக்கி வளர்த்த
உங்கள் கைகளை
நெஞ்சில் கோர்த்தோம்!
சேர்த்து வைத்த
அன்பை உங்கள்
மகிழுறவு தன்னில்
சேர்த்தோம்!!!!
👏👏👏👏👏👏💐
No comments:
Post a Comment