தங்கமே ! ஃபெங்கலே !
ஃபெங்கல் புயலே ! ப்ளீஸ் பேரிடர் வேண்டாமே
பிள்ளையாய் சிற்றடி வைத்து நெருங்குகிறாயே
வங்கக் கடல் உப்பு பிடித்திருக்கிறதோ?
வந்த வேலை முடித்து ஓட மாட்டாயோ ?
எங்க வீட்டுப் பிள்ளையாய் சாட்டை சுழற்றாதே
எங்கள் மேனியும் நம்பியார் போல் தாங்காதே
பொங்கும் கடலும், நீயும் போட்டி போடலாம்
பொருந்தாது உன் மோதல், நாங்கள் புழுவாம்
கங்குவாவால் காதுகள் கிழிந்தன போதும்
கரங்கள் நீட்டி மரங்கள் அழிக்காதே பாவம்
சிங்கம் நீதான்! நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்
சிற்றெறும்பு எம் மேல் கருணை வேண்டுகிறோம்
திங்கள், தாரகைகள் சேர்ந்ததே அவ் வானம்
திங்கள் நீ முனிய, எங்கு நாங்கள் போவோம்?
தங்கமே ! ஃபெங்காலே ! தணிந்திடு சீற்றம்
தரும் " ஆறுதல் சினம் " உன்னிலும் மாற்றம்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
---------------------------------
ஃபெங்கல் வந்தாலும்
பூம்பொழிலாய் கவிதை வரும்
பொங்கல் தின்றாற்
போல் உளமெலாம்
தித்திக்கும்
எங்கள் குத்தனூரார்
சொல்லாட்சி
மயக்கம் தரும்
நற்றமிழ் கவிதையிது எதிரொலிக்கும் எத்திக்கும்.
ஃபெங்கல் சீற்றம் தணிகிறதோ இல்லையோ
தமிழின் ஏற்றம்
உலகையே
வலம் வரும்.
--ஸ்ரீவி
-----------------------------
ஃபெங்கல் புயலே!
எமது நீர்நிலைகள்,
குளங்கள்,ஏரிகள்(எவ்வளவு மீதம் இருக்கிறதோ அவ்வளவு) இவற்றை நிரப்பு
அதுவே உனக்கு சிறப்பு.
வலிவான புயலாம் நீ , ஃபெங்கல்.
ஆனால் தவறு,தமிழர் விருந்தோம்பல் கருதி
நீ இங்கு தங்கல்.
தென்றலாக கருமாறி
எம்மை வருடி, பன்னீர்
துளிகளாக குளிர்வித்து
செல், ஃபெங்கல்!
----மோகன்
-----------------------------
இடுக்கண் ஃபெங்கல்
வருங்கால்
குளிரில்/ பயத்தில்
தாளம் போடுமே
முப்பத்திரு பல்!
(விழுந்திருந்தால் கழித்துக் கொள்ளுங்கள்)
இருந்தாலும் கேட்போம்
ஏதேனும் முறுகல்..
பள்ளிகள் மூடல்..
சீறும் புயல் கண்டு
சிறுவர்கள் மட்டும் செய்யவில்லை சாடல்..
வீட்டிலிருந்தே வேலை
பார்ப்போரின்
வழியில்லா புலம்பல்!
விடியற்காலை விடைபெறுமாம்..
சின்னஞ்சிறிய ஆறுதல்!
அதுவரை
அடித்துத் தள்ளுமே
இந்தப் புயல்!
ஏரி குளங்கள் நிரம்பல்..
வண்டிகள் போக வழியில்லாமல் திரும்பல்..!
சுலபமாய்ச் சொல்லிவிட்டாய்...
கேட்கிறது முனகல்!
வேறு வழியில்லை..
காலை வரை சற்றுப் பொறுங்கள்!
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment