இந்தக் குளிரில்...
இந்தக் குளிரு நமக்கு ஒத்துவராது
எத்தனை சட்டை போட்டுக் கொள்வது
பெந்த பெந்த விழியும் விழிக்குது
பெங்களூரா? என ஐயம் எழுகுது
வெந்த சோறு அது வேண்டாம் என்குது
விறுவிறு, மொறுமொற என வேண்டுது
பிந்து அப்பளம் பொரி எனக் கேட்குது
பிள்ளைக்கும் இலாமல் தின்று தீர்க்குது
மந்தமாய்க் கைகட்டி உட்காரச் சொல்லுது
மசால்வடையாவது கிடைக்குமா ஏங்குது
தந்திமுகனை வணங்க நிபந்தனை வைக்குது
" தருவாரா பொங்கல் சுடச்சுட? " என அது
சந்திரன் அவனைப் போ என விரட்டுது
சப்பாத்தி, குருமா கேட்டு மிரட்டுது
அந்த நாள் படம் " அதே கண்கள் " பார்க்கணும்
அதோடு வறுத்த வேர்க்கடலை கொரிக்கணும்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment