நான்காம் கனி
கப் பில் செக்கச் சிவந்த மாதுளை வித்துக்கள்
கரிசனமாய் நீட்டிய மனைவி வாயில் முத்துக்கள்
எப்போதோ நடந்தது இன்றும் நெஞ்சில் பசுமை
ஏனோ இந்நாளில் எல்லாம் தோணுது வெறுமை
குப்பனும், நானும் குழந்தையராய் நண்பர்கள்
கூடி விளையாடினோம் குத்தனூர் மண்ணில்
தப்பெனத் தெரிந்தும் துணியும் வயது
தண்டனை ஏதானாலும் ஏற்கும் மனது
சிப்பாய் போல் துல்லியமாய்த் திட்டம் போடுவோம்
சீறி நாகம் வரினும் எதிர் கொள்வோம்
அப்பா அறிந்தால் அடி வாங்கும் கன்னம்
அம்மா " அடுத்த முறை பண்ணாதே " என்னும்
முப் பழங்கள் தொடர்ந்து இக் கனி நான்காம்
முள்ளிடை யாரோ மூடிய செந்தேனாம்
சப்பாத்திக் கள்ளியின் கனியே மனக் கண்ணில்
சட்னி, குருமா ஏதும் வேணாம் அதை உண்ணில்.
.
.
கப்பில் செக்கச் சிவந்த மாதுளை வித்துக்கள்
கண்டுகொள்ளாத நான், ஏக்கத்தில் ஈக்கள்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment