நிலையில்லா வாழ்வில்
நித்தம் நித்தம்
எத்தனையோ
தேடும் மனிதா!!!
பொன் பொருளை விட்டு -
அழுக்கில்லா இயற்கையைத்
தேடு.
ஆதரவான உறவைத் தேடு.
இனிய நட்பைத் தேடு.
ஈகையில் மகிழ்வைத் தேடு.
உன்னில் உலகைத் தேடு.
ஊழலற்ற சமுதாயம் தேடு.
எண்ணித் துணியும் திறமையைத்
தேடு.
ஏற்றமிகு எண்ணத்தைத் தேடு.
ஒழுக்கமிகு வாழ்வைத் தேடு.
ஓங்கிச் சொல்லும் துணிவைத்
தேடு.
- முகம்மது சுலைமான்
*----*
தேடித் தேடி....
தேனீ தேடியது, தேன் நமக்குக் கிடைத்தது
தினகரன் தேடலில் தினந்தோறும் கிடைக்குது
மானை இராமன் தேட மனைவி பறிபோனாள்
மாருதி தேடலில் மைதிலி அவள் கிடைத்தாள்
வானில் தண்ணிலவு தேடுது எதையோ பாவம்
வருந்தும் தலைவியிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும்
கானமதில் செல்வார் சிலர் கடவுளைத் தேடி
கடவுளே பலவாய் அறியார் கண் முன்னாடி
பல் அது தேடியது பட்டாணி கிடைத்தது
பாகல், சுண்டை அவை தேடாமல் கிடைத்தன
வல்லினம் தேடலில் மெல்லினம் கிடைத்தது
வாண்டுகளோடு இலவசம் வழுக்கை வந்தது
சொல் எல்லாம் தேட கவிதையும் பிறக்குது
சொன்ன பொருளில் கவிதை சொரியச் சொல்லுது
எல்லாம் தேடும் மனிதா ! என்று உனைத் தேடுவாய்?
இருப்பிடமது அறிய மௌனத்தில் புகுவாய்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
*------------*
தேட வேண்டியதை தொலைத்து விட்டு.....
தொலைக்க வேண்டியதை தேடிக்கொண்டிருக்கிறாயே?
முதலில் உன் தேடல் எதுவென தேடு
😊 சாயி 😊
-
No comments:
Post a Comment