ஆந்தையே!
என் வீட்டுப் பால்கனியில்
உன்னை கண்டது விந்தையே!
மகிழ்ந்தது என்
சிந்தையே!
ஆங்கிலத்தில் புத்திசாலிக்கு
உவமையே!
இது நாள் வரை
புத்தகத்திலும் தொலைக்காட்சியிலும் மட்டுமே
இருந்தாயே!
என் இல்லத்தில் நீயா?
உன் இல்லத்தில் நானா?
உன் உறைவிடம் தலைக்கீழாய்!!!
இதற்காகவா பறந்து
வந்தாய்????
ஆந்தை விடு தூதாய்
இயற்கை அன்னையிடம்
சொல்வாயா?
உன்னைப் படைத்துப் பாதுகாக்கும் அவளுக்கு அவளையும்
பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று!
அவளை அழிக்க உண்டு
பல்லாயிரம் பேர்!
அரவணைக்க உண்டோ
சில பேர்????
No comments:
Post a Comment