விழிகள் மூட
மணி பத்தரை!
உடன் வந்ததே
நித்திரை!
கனவுகளுக்கு உண்டோ
காட்சித் திரை?!
காட்டாறாய் ஓட உண்டு
மனத்திரை!
மாதமோ சித்திரை!
நாட்காட்டி பார்த்தது விழித்திரை!
புதிய திரைப்படம்
வெளியிட்டது வெள்ளித்திரை!
நுழைவுச் சீட்டில்
தேதியுடன் ஒரு முத்திரை!
பெற்று அமர்ந்தவுடன்
மேலே எழும்பியது
துணித்திரை!
மெல்லத் திறந்தது
ஒளித்திரை!
ஒளி பட்ட இடமோ
முகத்திரை!
கண்கள் கூச
காலை வைத்துப் பார்த்தால்...
வெறும் தரை!!
காலையில் எழுப்பும்
ஞாயிறுக்குப் போடவில்லை
சன்னலில் திரை!
*எல்லாமே* *கனவு* *தானோ* *கடைசி* *வரை* ?!
நித்திரையிலும்..
வாழ்க்கைத் திரையிலும்.....
- கழல் சங்கீதா
No comments:
Post a Comment