" ழ " கரக் கவியரங்கம்
சோலையாம் மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம்
சொன்னது போல் நேற்று " ழ " கரக் கவியரங்கம்
" வால் சுருட்டி இருக்க வேண்டும் " இது தலைமை
வாய் பாடும் கவிதைகள் கவிகள் கொட்டியவை
தோலில் புள்ளிகள் கொண்ட இரு சிறு மான்களாம்
தொடக்க உரை, நன்றியுரை சொல்ல வந்தனவாம்
காலால் ஈரெட்டடி பாயும் புலிக் குட்டி ஒன்றும்
கவிதை ஏந்தி தாயோடு வந்ததாம் அதுவும்
சேலையில் செவசெவன்னு சிறப்பு விருந்தினராம் ,
சிங்க ராஜாவும் அழகாய் வீற்றிருந்தாராம்
வேலை எல்லாம் விட்டு வந்த ஆர்வலர்களாம்
வெகுநேரம் கரவொலி ஓயவில்லையாம்
நூல் இரண்டு தலைவரின் வெளியீடாம்
நூறு ஐஸ் க்ரீம் மகிழ்ச்சி அனைவருக்குமாம்
மாலைப் பொழுது இவ்வாறு இனிதே கழிந்தது
மல்லிப் பூ இட்லியும் மறவாமல் கிடைத்தது.
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment