Saturday, September 7, 2024

விநாயகர் சதுர்த்தி நாளில்...



கோலம், குதூகலம் நிரம்பி இங்கு வழிந்தது

   கொழுக்கட்டை பிரியர் விநாயக சதுர்த்தி அது


ஆலமரமாய்த் தழைத்த அரச மரம் கீழே

   ஆநந்தமாய் அருளும் ராஜ விநாயகரே


காலை விடியலில் தொடங்கியது ஹோமம்

   காஃபி நினைவே வரவில்லை ஏனாம்? 


பால், தயிர், தேனென அபிஷேகம் பலவாம்

   பாடல், அலங்காரம், அர்ச்சனை வேறாம்


மாலையில் வேத பாராயணம் ஒலித்தது

   மன்னர் விநாயகர் கோலம் சந்தனத்தில் ஜொலித்தது


தோளில் ஏந்தியவாறு வீதி உலா புறப்பட்டது

   தொண்டை வீச்சு காட்டிய ஹரீஷ், மற்றவர் பாட்டு


வால் கொண்ட அனுமன் வண்ணங்களில் மின்னினார்

   "வருவேன் நானும் ஒருநாள் வீதிவுலா" எண்ணினார்


சாலையில் மக்கள் வெள்ளம் கரை புரண்டது

   சுண்டல், சர்க்கரைப் பொங்கல் கையைச் சுட்டது. 


__  குத்தனூர் சேஷுதாஸ்


No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...