பாரதியின் நினைவில்...
மண்ணில் நம் பாரதமே மகத்தான தேசம் என்றாய்
மறைகள், மற்றவை பல கண்டிங்கு வியந்தாய்
கண்ணில் வெள்ளையரை விரல் விட்டாட்டினாய்
காலன் முன் கால் காட்டி நாராணன் என மிரட்டினாய்
பெண் விடுதலை உண்மையாக விரும்பியது நீ தானே
பெயருக்கு பேசித் திரியும் போலிகள் பலராமே
தண்ணிலவாய், தெள் தேனாய் தமிழைச் சுவைத்தாய்
தரணியில் அதற்கு இணை வேறிலை என்றாய்
பண்கள் பல நூறால் தண் தமிழை அர்ச்சித்தாய்
படகு ஏறி, சிந்து மிசை பாரதத்தை சிலாகித்தாய்
வண்ணம் அதில் உனக்கு கருமை தான் பிடிக்கும்
வாயார கண்ணன் பாட்டு, குயில் பாட்டு சொல்லும்
உண்ண உணவின்றி உன் வாழ்க்கை இருந்தது
உணர்ச்சி, தோற்றம், மீசை அதை பொய்த்தது
அண்ணலே! பாரதி! அவசரமாய் சென்றதெங்கே?
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் இங்கே.
__ குத்தனூர் சேஷுதாஸ்
-----------------
உந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாய்ந்ததுன் காதினிலே!
தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள்
பேசும் பல வேடிக்கை மனிதரைப் போல
நீ வீழ்ந்திடாமல்
நீ உதித்த தேசம்
பரங்கியரின் கைகளில்
சிக்குண்டதை எண்ணி
வெந்து தணியா உன்
மனம் அக்கினிக் குஞ்சென
வந்தேமாதரம் வந்தேமாதரம்
என்று அறைக்கூவல்
விட்டதன்றோ!
நாடு காக்க
பாஞ்சாலி போல்
சபதம் பூண்ட நீ
குயிலின் துயரையும்
கேட்டாய் !
கண்ணனை உன் கண்ணம்மாவாகவும் ஆக்கிக் கொண்டாய்!
ஆணாகப் பிறந்தும்
கற்பு நெறியை
இரு பாலருக்கும்
பொதுவில் வைத்தாய்!
ஆணுக்கிங்கே நான்
இளைப்பில்லை
என்று கும்மியடித்துப் புரிய வைத்தாய்!
போனதெல்லாம் கனவினைப் போல்
புதைந்தழிந்தே போனதனால்
நீயும் ஓர் கனவா???!!!!
அல்ல!!! அல்ல!!!
உன் படைப்புகளில்
என்றென்றும் வாழ்வாய்!
அழிவற்ற நம் தமிழ் வாழும் வரை!!!
- சங்கீதா
--------------------------
*பாரதி நினைவு நாளில் மன ஓட்டம்*
*எதுகை மோனை ஏதும் அறிகிலேன்* யான்
*எது கை வருமோ அதுவே எதுகை* என்பேன்
மலைக்கும் *பாரதி*
முதிர்ந்த
மழலைக்கும் *பாரதி*
கற்றாற்கும் *பாரதி*
கற்றிலார்கும் *பாரதி*
மங்கையர்கும் *பாரதி*
மணாளனுக்கும் *பாரதி*
வீரத்திற்கும் *பாரதி*
விவேகத்திற்கும் *பாரதி*
விர சுதந்திரத்ற்கும் *பாரதி*
விறுநடை போடவைத்தான் *பாரதி*
முதல் படைப்பு தவறு இருப்பின்.....
- திருவீழிமிழலை ஸ்ரீனிவாசன்
-------------------------------
No comments:
Post a Comment