Tuesday, September 10, 2024

மகா கவி பாரதி

 மகா கவி பாரதி

-----------------

கவிதையும் நாட்டுக்குழைத்தலும்

தொழிலாகக் கொண்டவர்

இமைப்பொழுதும்

சோராதிருப்பார்

எமது முண்டாசுக் கவிஞர்.


நம்நினைவை விட்டு 

நீங்கினால்தானே

நினைவு தினம் என்று

கொண்டாடு வதற்கு?


நாவிலும் நெஞ்சிலும்

என்றென்றும் நினைந்திருப்பவரை

தினமுமே போற்றிக்கொண்டாடுவோம்.


இன்று அவர் இருந்தால் சிறுமை கண்டு சீறி எழுந்தாலும்

இன்றையப் புதுமைப்பெண்களைக் கண்டு பெருமிதமும்

கொண்டிருப்பார்.


- இ.ச.மோகன்


------------------------------

 மகாகவி..

பா(டல்)க்களுக்கு அழகு சேர்த்த,

பா - ரதி !


பா-ரதி-யாரென 

பார்(உலகம்) -அதிர,

பாரதி(சரஸ்வதி) தந்த

பா-ரதி அவர்.. 


அவர் நினைவில் ,

மதியால் விதி வெல்ல ,

இனியொரு விதி செய்வோம்..


- இலாவண்யா


No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...