வல்லினம் மிகுமா?
" குழுவாய் ", " பெறுவோம் " இங்கு வல்லினம் மிகுமா?
கொளுத்திப் போட்டது நான் தான் போதுமா?
பழமாய் நினைத்து பறவைகள் பல வந்தன
பாதியில் அம்போவென விட்டுப் பறந்தன
அழகாக நடுநிசி அம்புட்டும் பகிர்ந்த (சண்முக சுந்தரம்) ஐயா
ஆனாலும் குட்டையது தெளியவில்லை மெய்யாய்
கழுவித் துடைத்தது போல் எல்லாம் மறந்தது
காத்திருந்த கனவழைக்க கண்ணும் மூடியது.
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment