த.பால் என்பவரும் தனபால் என்பவரும் அக்கம்பக்கத்தினர்.
இருவரும் " தபேலா" கலைஞர்கள்.
"த.பால்" லுக்கும்
"தனபால்" லுக்கும்
தபால் தர வரும்
தபால்காரர்,
"த.பால்" லுக்கு தபால்...
"தனபால்" லுக்கு தபால்.... என்று அழைக்கும் போதெல்லாம்
த.பால்,தனபால் இருவருமே தனக்குத் தான் தபாலென்று தடாலென்று கதவைத் திறப்பர்.
"பால்" என்று பால்காரர் கூவி அழைக்கும் போதும் காலையிலேயே தபாலா என்று தபேலா வாசிப்பதை நிறுத்தி விட்டு தடாலென்று கதவைத் திறப்பர்.
பின் த.பால், தனபால் இருவரும் தபால்காரரிடமிருந்து தபால் வாங்கிக் கொண்டோ வாங்காமலோ..... (பால்காரரிடம் பால் வாங்கிக் கொண்டு) தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தபேலா வாசிக்க சென்று விடுவர்.
- சங்கீதா
அந்தத் தபாற்காரர் பெயர் ஜெயபால்.
-ஸ்ரீவி
வசித்த இடம் இம்பால்
- மோகன்
படித்தது "மணிபால்"
குடிப்பது ஆ வின் பால்.. இம்பாலில் "ஆவின்" பால் கிடைக்குமோ???
- சங்கீதா
பசும்பால் எனச் சொல்லி விட்டால் சரியாகிடும்
-ஸ்ரீவி
கிடைக்கும் ஆ
'ஆ'வின் பால்
சுத்தமான மலைப்புல்லை உண்ட ஆவினங்கள்மூலம்!
- மோகன்
தொடர்பு எல்லைக்கு அப்பால்
என அலைபேசி சொன்னாலும்
த.பால் தனபால் கையில்
ஜயபால் சேர்ப்பார் தபால்
- அமுதவல்லி
ஆம்.. தப்பாமல் சேர்ப்பார் தபால்.
- சங்கீதா
-
No comments:
Post a Comment