Monday, September 16, 2024

மாளயம்

 மாளயம் நாளை முதல்... 

   

புரட்டாசி அமாவாசை,  தேய்பிறை, பிரதமை முதல்

   பூமி வரும் முன்னோரின் மாளயம் ஆரம்பம்


திரளாக வருவார் தெரிந்தோர், தெரியாதோர்

   தெய்வங்களாய் வாழ்த்துவர், வழி நடத்துவார்


அரிசி, எள், நீரில் அன்னார்க்கு விடும் தர்ப்பணம்

   அதுவே போதும் அடைவர் அளவிலா ஆனந்தம்


பரிசாக நாம் செய்த பாவங்கள் தொலையும், 

   பாலகன் தவழும், *பதினாறும் பெருகும்


துரித உணவுகள் இந்நாளில் தவிர்க்கவும்

   தூரத்திலிருந்து வந்த கேரட், பீட்ரூட்டும்


உரியும் வெங்காயம், பூண்டும் வேண்டாமே

   உள்ளூர் வாழை, அவரை, கொத்தவரை உண்போமே


*பரியாம் பந்தல் ஏறும் பாகற்காய், புடலை

   பசியாரப் போதும் பதினாறே நாளும்


உருளைக் கிழங்கு, பூரி நாவது கேட்கும்

   " உரிப்பேன் தோலை " என மிரட்டி வையும். 


*பதினாறு செல்வங்கள், குதிரை


__  குத்தனூர் சேஷுதாஸ்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...