முத்தே முத்தமிழே மூத்தவளே மூழ்கடித்தவளே
மாற்றத்தை ஏற்றவளே மாறாத இனிமையுடையவளே
செழுமை மிக்கவளே அனைத்திலும் தடம்பதித்தவளே
எண்வடிவைக் கொண்டவளே எண்ணில் வசிப்பவளே
ஜி. யூ. போப் கால்டுவெல் ஜோசப் பெஸ்கி தொடர்ந்து
நின்னை யாவரும் மொழிவதில் வியப்பில்லை
என்றும் இளமைப்புதுமையுடன் வளம் வருகிறாய்!
எட்டையப்புர மன்னர் எட்டப்பபூபதி அவைப்புலவர்
அமுதக்கவி இசுலாமியக் கம்பர் தமிழ்ப்புலவர்
ஆதரித்தவன் சீதக்காதி வள்ளல் *தமிழன்* உமறுப்புலவர்
படைப்புகள் சீதக்காதி தொண்டி நாடகம்
முதுமொழி மாலை சீறாப் புராணம்
அறிவீரோ தமிழன்னை இனம்கடந்து அமுதூட்டியவள்...
- சுல்தானா
No comments:
Post a Comment