Thursday, August 29, 2024

காணாமல் போனோர் தினம்

 தொலைந்து காணாமல் போனார் தினமாமின்று

   தொல்லை தாங்காமல் (வீடு) துறந்தார் மட்டுமன்று


அலையாக ஆன்மா திரும்பத் திரும்ப வருது

   அதன் வடிவம் வெவ்வேறு, இரு வினை தருது


மலை போல் சில உருவம் நெஞ்சில் நிற்கிறது

   மற்றவையோ நீரில் உப்பாய்க் கரைகிறது


கலைவாணரும் இந்நாள் காணாமல் போனது

   கண்ணதாசன் சொன்னவை* நினைவுக்கு வருது. 


* " வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால்

  இந்த மண்ணில் நமக்கு இடமேது? "


__  குத்தனூர் சேஷுதாஸ்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...