தொலைந்து காணாமல் போனார் தினமாமின்று
தொல்லை தாங்காமல் (வீடு) துறந்தார் மட்டுமன்று
அலையாக ஆன்மா திரும்பத் திரும்ப வருது
அதன் வடிவம் வெவ்வேறு, இரு வினை தருது
மலை போல் சில உருவம் நெஞ்சில் நிற்கிறது
மற்றவையோ நீரில் உப்பாய்க் கரைகிறது
கலைவாணரும் இந்நாள் காணாமல் போனது
கண்ணதாசன் சொன்னவை* நினைவுக்கு வருது.
* " வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கு இடமேது? "
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment