••••••••••••••••••••••••••••••••••••
முள்ளை உதிர்த்த ரோஜா
••••••••••••••••••••••••••••••••••••
தொட்டியில் இருந்த ரோஜா செடியில்
ரத்த சிவப்பில் ரோஜா ஒன்று மலர்ந்தது!
கண்ணை பறிக்கும் நிறத்தில் ஒளிர்ந்தது.
தன்னைப் பார்த்து அழகில் மயங்கி
தன்னை நோக்கி தவழ்ந்து வந்த
அழகிய சிறு குழந்தை கண்டதுமே
அன்றலர்ந்த அந்த ரோஜாவோ
தானே மனமுவந்து தன் முள்ளை உதிர்த்தது.
வருகின்ற குழந்தையை ஆசையாய்ப் பார்த்தது
அதனாலேயே அந்த அழகிய ரோஜா
இருந்ததை விட
மேலும் அழகானது.
கதிரொளியில் வைரம் போல் ஜொலித்தது.
- ஸ்ரீவி
No comments:
Post a Comment